50 ஆண்டுகளுக்கு பிறகு தான் பாடிய பாடலை மீண்டும் பாடிய ஜேசுதாஸ்




சிம்பு தேவனின் உதவியாளர் நவீன் இயக்கி வரும் படம் "மூடர்கூடம்". ரஜாஜ், ஓவியா நடிக்கிறார்கள். வாழ்க்கை சந்தோஷங்களால் நிறைந்தது. அதை கண்டுபிடிக்கும்போது சந்தோஷப்படுகிறோம். 

கண்டுபிடிக்க தவறும்போது வருந்துகிறோம் என்ற கருவை மையமாக வைத்து காமெடி படமாக தயாராகி வருகிறது. 

நடராஜன் சங்கரன் என்ற புதுமுகம் இசை அமைத்து வருகிறார். 

இந்தப் படத்தின் கிளைமாக்சில் "நீயும் பொம்மை நானும் பொம்மை நினைத்து பார்த்தால் எல்லாம் பொம்மை..." என்ற பழைய பாடலை ரீமிக் செய்து சேர்க்கிறார்கள்.

50 ஆண்டுகளுக்கு முன்பு கே.பாலச்சந்தார் இயக்கிய பொம்பை என்ற திகில் படத்தில் இந்தப் பாடலை கே.ஜே.ஜேசுதாஸ் பாடியிருந்தார். 

அவரை மீண்டும் அழைத்து வந்து அதே பாடலின் ரீமிக்சை பாட வைத்திருக்கிறார்கள். 

தமிழில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜேசுதாஸ் பாடியிருக்கிறார் என்பதும். அவர் பாடிய முதல் ரீமிக்ஸ் பாடல் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...