நயன்தாராவுக்கு சகலமும் ஆர்யாதானாம்


பிரபுதேவாவிடமிருந்து முற்றிலுமாக விலகிவிட்ட நயன்தாராவுக்கு பலவிஷயங்களிலும் உதவிகரமாக செயல்பட்டு வருகிறார் ஆர்யா. 

அவருக்கு வீடு பார்த்து கொடுப்பது முதல், படம் வாங்கி கொடுப்பது, சம்பளம பேசுவது என்று சகலமுமாகி வருகிறார். 

இதெல்லாம் வெளிப்படையாகவே செய்து வருகிறார். ஆனால், நயன்தாரா மீது அவர் ஓவர் கரிசனம் காட்டி வருவது இன்னும் வெளிச்சத்துக்கு வரவில்லை.

அதாவது, தான் வேறு ஸ்பாட்டில் நடித்துக்கொண்டிருந்தாலும் அடிக்கடி நயன்தாராவுக்கு போன் போட்டு, சூழ்நிலைகளை விசாரிக்கிறாராம். குறிப்பாக, தான் சாப்பிடுவதற்கு முன்பு நயனுக்கு போன் போட்டு சாப்பிட்ட விவரத்தை கேட்டறிய மறப்பதே இல்லையாம். 

அவர்களுக்குள் அப்படியொரு அந்நியோன்யம் நிலவி வருகிறது. அதேபோல் நயன்தாராவும், தான் வீட்டில் ஓய்வாக இருக்கும் நாட்களில் கேரள பக்குவத்துடன் சமைத்து அதை படபபிடிப்பு தளத்தில் இருக்கும் ஆர்யாவுக்கு கொடுத்து அனுப்புகிறாராம். 

அதை நயனுடன் போனில் பேசிக்கொண்டே ருசிக்க ருசிக்க சாப்பிடுகிறாராம் ஆர்யா. அவர்களுக்கிடையேயான நட்பு இப்போது இந்த அளவுக்கு முத்திப்போய் விட்டதாம். 

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...