சினிமா விழாவில் புறக்கணிக்கப்பட்ட தலயும், தளபதியும்

நடைபெற்று வரும் சினிமா விழாவுக்கு தமிழ் சினிமாவின் சில முக்கிய கலைஞர்கள் அழைக்கப்படவில்லை. இருப்பினும் அழைக்கவே மாட்டார்கள் என்று நினைத்த அந்த தளபதி நடிகரையும் அழைத்திருந்தனர். 

ஆனால், விஐபிக்கள் அமரும் வரிசையில், அவருக்கு கடைசியில்தான் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. 

அதைப்பார்த்த சில நடிகர்கள் அவரை முன்னாடி வரிசைக்கு வருமாறு அழைத்தபோது அதை அவர் மறுத்து விட்டாராம். 

சினிமா விழாவை பொறுத்தவரை கவனிக்கப்படாதவராக இருந்த தளபதி நடிகருக்கு இன்னொரு வருத்தமான நிகழ்வும் அங்கு நடந்தது.

அதாவது, நூற்றாண்டு கண்ட சினிமாவில் பெரும்பாலான முக்கிய கலைஞர்கள் சம்பந்தப்பட்ட க்ளிப்பிங்ஸ் திரையிடப்பட்டது. 

ஆனால் தற்போது கூடுதலான இளவட்ட ரசிகர்களை பெற்றிருக்கும் தளபதி சம்பந்தப்பட்ட ஒரு புகைப்படம்கூட அதில் இடம்பெறவில்லை. 

அதனால் மேடையில் பேச அழைக்கும்போதுகூட சோர்வான முகத்துடனேயே பேசிவிட்டு இறங்கிச்சென்றார் நடிகர். இதேபோன்றுதான் த‌ல நடிகருக்கும் நான்காவது வரிசையில்தான் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.

மேலும், வெளிமாநிலத்தைச்சேர்ந்த சினிமா கலைஞர்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு தரப்படவில்லை. என்றாலும் அதை யாரும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் பார்வையாளர்கள் போன்று விழாவுக்கு வந்து விட்டு வெளியேறினர்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...