விரைவில் அறிவிக்கிறார்கள் முகமூடி பார்ட்-2

யு டிவி தயாரித்திருக்கும் படம் முகமூடி. எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தப் படத்துக்கு பிறகு முகமூடி பார்ட் 2 தயாரிக்க இப்போதே தயாராகி வருகிறார் யு டிவி அதிகாரி தனஞ்செயன்.

முகமூடி தயாரிப்பில் இருந்தபோது வில்லனாக நடிக்கும் நரேன் சம்பளம் உள்பட பலவற்றில் தனஞ்செயனுக்கும், இயக்குனர் மிஷ்கினுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு காரசாரமாக மோதிக் கொண்டார்கள்.

ஆனால் இப்போது அவர்களுக்கும் அப்படி ஒரு நட்பு நதி பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால் மூகமூடி பார்ட்-2 வரும் என்றே தெரிகிறது.

இதனை தனஞ்செயன் வெளிப்படையாகவே பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்து விட்டார். அதிலும் ஜீவாவே ஹீரோ, ஹீரோயினும், வில்லனும் மாறுவார்கள். மிஷ்கினும் அடுத்து யு டிவிக்குதான் படம் இயக்குகிறேன் என்று சொல்லிவிட்டார்.

ஒருவேளை முகமூடி மக்களிடம் வரவேற்பு பெறாமல் போனால்... வேறொரு கதை ரெடியாக இருக்கிறதாம். அதைத் தொடங்கிவிடுவார்களாம்.

அந்த கதையில் நடிக்க ஜீவாவும் ஓகே சொல்லிவிட்டாராம்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...