சிவாவுக்கு சம்பளமே கொடுக்க கூடாது - பார்த்திபன்

ரஜினி நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான தில்லு முல்லு படம் இப்போது மீண்டும் ரீ-மேக் ஆகிறது. இதில் ரஜினி வேடத்தில் சிவாவும், அவருக்கு ஜோடியாக இஷா தல்வாரும் நடிக்கின்றனர். பத்ரி இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்தின் துவக்க விழா சென்னையில் நடந்தது. அதில் பிரபலங்கள் பலரும் பங்கேற்று பேசினர். விழாவில் பார்த்திபனின் பேச்சு தான் மிகவும் ஹைலைட்டாக அமைந்தது.

அவர் பேசுகையில், நடிகர் தேங்காய் சீனிவாசனுக்கு ரீ-பிளேஸ்மெண்ட் இதுவரை இல்லாமல் இருந்தது. தில்லு முல்லு படத்தில் தேங்காய் சீனிவாசன் ஏற்று நடித்த பாத்திரத்தை இன்று பிரகாஷ்ராஜ் ஏற்று நடிப்பது பாராட்டுதலுக்குரியது.

அவருக்கு சரியான ரீ-பிளேஸ்மெண்ட் பிரகாஷ்ராஜ்தான் இருக்கமுடியும். அதேமாதிரி சிவா, ரஜினி சார் கேரக்டரில் நினைத்து பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. சிவாவை விட புதுமுக நாயகி இஷா தல்வார் "நச்" என்று இருக்கிறார்.

சிவனே பார்வதியை தள்ளி வைத்துவிட்டு இதுமாதிரி ஒரு நாயகி கிடைத்தால் ஒரு டூயட் பாடிவிட்டு வருவார் என்றால், நம் சிவா எம்மாத்திரம்...? இப்பட புரடியூசருக்கு என் தாழ்மையான ஒரு வேண்டுகோள்.

இந்தபடத்தில் சிவாவுக்கு சம்பளமே தர வேண்டாம். வெறும் பேட்டா மட்டும் போதும். அத்தனை அழகான நாயகியை அவருக்கு சம்பளமாக தந்துவிட்டீர்கள் அது போதும் என்று தன் பாணியில் போட்டு தாக்கினார்.

முன்னதாக வேந்தர் மூவிஸ் எஸ்.மதன் அனைவரையும் வரவேற்று பேசினார். பரதநாட்டியம், ஐ.ஐ.டி. மாணவர்களின் இசைக்கச்சேரி, வசந்தின் மேஜிக் ஷோ, அழகிகளின் பரதநாட்டியம் உள்ளிட்ட சிறப்புகளுடன் தில்லு முல்லு படத்தொடக்க விழா ஏராளமான திரையுலக வி.வி.ஐ.பி.கள் புடைசூழ சிறப்பாக நடந்தேறியது!

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...