நயன்தாரவை துரத்தும் சிம்பு

நயன்தாரா தற்போது தென்னிந்தியாவின் மோஸ்ட் வாண்டட் நடிகை. அவரைச் சுற்றி எப்போதும் பிரச்சினைகள் இருந்தாலும் கோடிகளை கொட்டி தங்கள் படத்தில் அவரை புக் பண்ண தயாரிப்பாளர்கள் வரிசையில் நிற்கிறார்கள்.

ஹீரோக்களும் வெயிட்டிங். சிம்பு தமிழ்நாட்டில் இரண்டாவது வரிசையில் இருக்கும் ஹீரோ. நயன்தாரா நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட். வல்லவன், விண்ணைத் தாண்டி வருவாயா, இரண்டைத் தவிர சிம்பு படம் எதுவும் பெரிய ஹிட்டாகவில்லை.

இப்படி சினிமாவின் தர வரிசைப் பட்டியலில் பெரிய இடைவெளி கொண்ட இருவரும் ஒரு காலத்தில் காதலித்தார்கள். வல்லவன் படத்தின்போதுதான் இவர்கள் காதல் கொண்டார்கள். அப்போது இருவருமே சினிமாவில் ஒரே தரவரிசையில்தான் இருந்தார்கள்.

நயன்தாரா யார் மீதாவது அன்பு வைத்தால் அதில் அதி தீவிரமாக இருப்பார். உயிருக்கு உயிராக நேசிப்பார். அதற்கு ஒரு சிறு சேதாரம் வந்தால்கூட அதன் விளைவு பயங்கரமாக இருக்கும். அதனை அவரால் தாங்கிக் கொள்ள முடியாது. சிம்பு இந்த கேரக்டருக்கு நேர் எதிர்மறை.

எதையுமே ஜஸ்ட் லைக் தட் என எடுத்துக் கொள்பவர். அதனால் இருவருக்கும் ஒத்துப் போகாமல் பிரிந்தார்கள். பிரிவு கூட நயன்தாராவுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால் அவர்களின் அந்தரங்க உறவுகள் படமாக வெளிவந்தபோதும், அதை வெளியிட்டவரே சிம்புதான் என்ற தகவல் பரவியபோதும் அவர் ரொம்பவே அப்சட் ஆகிவிட்டார். இனி தன் வாழ்நாளில் சிம்புவுக்கு எந்தவிதத்திலும் இடமில்லை என்ற முடிவோடு தன் பயணத்தை தொடர்ந்தார்.

நயன்தாராவின் அதீத அன்பு அடுத்து பிரபுதேவாவின் பக்கம் பாய்ந்தது. பிரபுதேவாவின் அழகிலோ, அவரிடம் இருக்கும் செல்வத்திலோ அவர் மயங்கவில்லை. காரணம் அவரைவிட அழகானவர்கள், பணக்காரர்கள் நயன்தாராவின் பார்வைக்கே தவம் கிடக்கிறார்கள்.

பிரபுதேவா மகனின் மரணம் அவரைப்போலவே நயன்தாராவையும் பாதித்தது. அந்த பாதிப்புக்கு பரிகாரம் சொன்னவர் பாசத்தையும் சேர்த்து கொடுக்க அதுவே காதலானது. பிரபுதேவா தனக்கு மட்டுமே சொந்தமானவராக இருக்க வேண்டும் என்று நினைத்தார். அவர் பெயரை தன் கையில் டாட்டூ குத்திக் கொள்ளும் அளவுக்குச் சென்றார்.

இயற்கையிலேயே குடும்பத்தின் மீது மிகுந்த பாசம் கொண்ட பிரபு தேவாவினால் நயன்தாராவிற்காக தன் மனைவியை மட்டும்தான் தியாகம் செய்ய முடிந்தது. குழந்தைகளை விட்டுப் பிரிய முடியவில்லை. அன்பை பங்கு போட்டுக் கொள்ள விரும்பாத நயன்தாராவுக்கு இது சரியாக வரவில்லை. அவரிடமிருந்தும் பிரிந்தார்.

சிம்புவை விட்டு நயன்தாரா பிரிந்த பிறகு அவர் மார்க்கெட் இழந்து சாதாரண நடிகையாகிவிட்டிருந்தாலோ, அல்லது சினிமாவை விட்டு விலகி இருந்தாலோ நயன்தாரா என்ற ஒருவரை காதலித்ததையே சிம்பு வசதியாக மறந்து விட்டிருப்பார்.

ஆனால் பிரிவுக்கு பிறகான நயன்தாராவின் வளர்ச்சி அவரை மிகவும் ஆச்சர்யப்பட வைத்தது. அதிர்ச்சியடைய வைத்தது. நயனை தவறவிட்டுவிட்டோமோ என்று நினைக்க ஆரம்பித்தார். அதனால் மீடியாக்களிலும், தனிப்பட்ட நண்பர்களிடமும், ஏதாவது ஒரு வகையில் நயன்தாராவை குறிப்பிட்டுக் கொண்டே இருந்தார்.

அவர் எங்கிருந்தாலும் வாழ்க, அவரைப்பற்றி எனக்குத்தான் அதிகம் தெரியும், திருமணம் நடக்கட்டும் பார்க்கலாம் அவருடன் நடிக்க தயார், இப்படி ஏதாவது சொல்லி மீடியாக்கள் தன்னையும், நயனையும் சேர்த்து நினைக்க வைத்துக் கொண்டே இருந்தார். ஆனால் சிம்பு பற்றி நயன்தாரா எந்த இடத்திலும் பேசவில்லை. அப்படி ஒரு சில இடங்களில் மீடியாக்கள் பேச வைக்க முற்பட்டபோதும் அது முடிந்து போன கதை என்று மட்டும் சொன்னார்.

இப்போது நயன்தாரா, பிரபுதேவாவை விட்டு விலகிய நிலையில் தனது நெருக்கத்தை அதிகப்படுத்தியிருக்கிறார் சிம்பு. அவர் கலந்து கொள்ளும் விழாக்களில் வாலிண்டரி அட்டனென்ஸ் கொடுப்பது. அவர் கலந்து கொள்ளும் பார்ட்டிகளில் ஆர்வமாக கலந்து கொள்வது. அல்லது தானே பார்ட்டி கொடுத்து அதற்கு நண்பர்கள் மூலம் நயனை வரவழைப்பது என்று தனது காய்களை நகர்த்தினார்.

அப்படி நடந்த ஒரு பார்ட்டியில் இருவரும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். மரியாதை நிமித்தமாக ஹாய் சொல்லியிருக்கிறார். தயாராக நின்றிருந்த போட்டோகிராபர் அதனை படமெடுத்திருக்கிறார். இவ்வளவுதான் நடந்தது.

பத்திரிகையாளர் கலந்து கொள்ளாத, பத்திரிகையாளர்களுக்கு அனுமதி இல்லாத ஒரு பார்ட்டியில் எடுத்த புகைப்படம் பத்திரிகைக்கு எப்படி வந்தது. ஆனால் வந்துவிட்டது. சிம்புவும், நயன்தாராவும் மீண்டும் இணைகிறார்கள் என்று மீடியாக்கள் இதனை கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

நாளைக்கு சிம்புவும், நயன்தாராவும் இணையலாம், திருமணம் செய்து கொள்ளலாம். அப்படி நடந்தால் சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல் என்று நயன் முடிவு செய்துவிட்டார் என்று பொருள்.

1 comments:

Unknown said...

வணக்கம் ,
உங்களை எம்மோடும் இணைத்துக்கொள்ளுங்கள்.
நன்றி.
www.thiraddu.com

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...