வெளிவர முடியாமல் தவிக்கும் கரண் படங்கள்

வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வந்த கரண், கொக்கி படத்தின் மூலம் திடீரென ஹீரோ அவதாரம் எடுத்தார். அந்தப் படம் வெற்றி பெறவே தொடர்ந்து ஹீரோவாக வலம் வர ஆரம்பித்தார்.

அடுத்து அவர் நடித்த கருப்பசாமி குத்தகைதாரர் படமும் வெற்றி பெற மார்க்கெட் எகிறியது. குணசித்திர வேடங்களில் நடித்து வந்த காலத்தில் நான்கு லட்சம், 5லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த கரனின் சம்பளம் ஹீரோவான பிறகு 80 லட்சம் வரை உயர்ந்தது.

ஒரு கோடியாக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தபோது கருப்பசாமி குத்தகைதாரர் படத்துக்கு பிறகு வெளிவந்த தி நகர், மலையன், தம்பி வெட்டோத்தி சுந்தரம் படங்கள் சரியாக போகாததால் கரணின் ஹீரோ மார்க்கெட் சரிந்தது. கரண் பரபரப்பாக இருந்தபோது வாய்ப்பு வந்த படங்களில் எல்லாம் ஒப்புக் கொண்டு நடித்தார். அப்படி தயாரான படங்கள்தான் கந்தா, சூரன்.

இப்போது கரண் மார்க்கெட் சரியில்லாத நிலையில் இரண்டு படங்களையும் வாங்க ஆளில்லை. கந்தா படத்தை தயாரிப்பாளர் சொந்தமாக வெளியிட நினைத்தார்.

அதற்கு முன்பு அவர் பெற்ற கடன்கள் படத்தை வெளிவரவிடாமல் தடுத்தன. இப்போது சூரன் படத்தை வெளியிட தயாரிப்பாளர் முயற்சி செய்து வருகிறார்.

ஆனால் வாங்குவதற்கு யாரும் முன்வராததால் அதுவும் கிடப்பில் கிடக்கிறது. இதைப் பற்றி கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாத கரண் அடுத்த படத்துக்கு கதை கேட்பதில் பிசியாக இருக்கிறார்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...