தமிழ் சினிமாவில் தொடரும் தலைப்பு சண்டை

வேறெந்த மொழி சினிமாவிலும் நடக்காத கூத்து ஒன்று தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடந்து வருகிறது. அது படத்து தலைப்புக்கான சண்டை.


ஒரு படம் எடுக்க வேண்டுமானாலும் கம்பெனி பெயரையும், படத்தின் பெயரையும், தயாரிப்பாளர் சங்கத்திலோ, தயாரிப்பாளர் கில்டிலோ அல்லது சேம்பரிலோ பதிவு செய்ய வேண்டும். இந்த மூன்று சங்கங்களும் தகவல் பரிமாற்றத்தின் மூலம் ஒரே தலைப்பு இரண்டு இடங்களில் பதிவாகமால் பார்த்துக் கொள்ளும்.


இதுதான் நடைமுறை. ஆனால் கில்டிலும், சேம்பரிலும் தலைப்பு பதிவு செய்ய கட்டணம் குறைவு என்பதால் சிலர் சகட்டுமேனிக்கு தலைப்புகளை பதிவு செய்து வைப்பார்கள். ஆனால் படம் எடுக்க மாட்டார்கள். ஆண்டுதோறும் பணம் கட்டி அதனை மறுபதிவு செய்து விடுவார்கள்.


ஒரு பெரிய கம்பெனி படம் எடுக்க ஒரு தலைப்பை வைத்தால். அந்த தலைப்பை ஒரு உப்புமாக கம்பெனி பதிவு செய்து வைத்திருக்கும். அப்போது அந்த கம்பெனிக்கு ஒரு தொகையை கொடுத்து விட்டு தலைப்பை வாங்கிக் கொள்வார்கள்.


இந்த மாதிரியான தலைப்பு வியாபாரத்துக்காகத்தான் சிலர் தலைப்பை பதிவு செய்தே வைக்கிறார்கள். ஏதாவது ஒரு சங்கத்தில்தான் தலைப்பை பதிவு செய்ய வேண்டும்.


பதிவு செய்த தலைப்பைக் கொண்டு ஒரு வருடத்துக்குள் படம் எடுக்க வேண்டும் இல்லாவிட்டால் தலைப்பு செல்லாது என சில கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வந்தால் இந்த தலைப்பு பிரச்சினை இருக்காது.


சரி, இது ஒருபுறம் இருக்கட்டும். மாதக் கணக்கில் ரூம்போட்டு யோசித்து, டிஷ்கசன் நடத்தி திரைக்கதை எழுதும் இயக்குனர்கள் ஏனோ இந்த தலைப்பில் மட்டும் தவித்துப் போகிறார்கள். இப்போது கூட விஜய் நடிக்கும் ஒரு படத்துக்கு துப்பாக்கி என்று பெயர்.


ஆனால் இன்னொரு கம்பனி கள்ளத்துப்பாக்கி என்ற பெயரில் ஒரு படம் எடுத்து வைத்திருக்கிறது. பிரச்சினை இப்போது நீதிமன்றத்தில் இருக்கிறது. விஷால் நடிக்கும் சமரன் படத்தின் பெயரை இன்னொருவர் வைத்திருக்கிறார்.


இதனால் விஷால் படத்துக்கு சமர் என்று பெயர் மாற்றியிருக்கிறார்கள். விக்ரம் நடிக்கும் படம் தாண்டவம். இன்னொருவர் இதே தலைப்பை பதிவு செய்திருக்கிறார். இது சம்பந்தமாக பஞ்சாயத்து பேசி விக்ரம் படத்தின் பெயரை சிவதாண்டவம் என்று மாற்றிக் கொள்ள ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இன்னும் மாற்றவில்லை என்று எதிர்தரப்பு கோர்ட்டுக்கு சென்றிருக்கிறது.


இது பெரிய படங்களுக்கான பிரச்சினை. சிறிய படங்களுக்கு இந்த பிரச்சினை இன்னும் அதிகம். "செம்மொழியான தமிழ் மொழியில் தலைப்புக்கா பஞ்சம். ஏன் இப்படி அடித்துக் கொள்கிறார்கள். படத்தின் பெயருக்காகவா படம் ஒடப்போகிறது.


கதையை நன்றாக இருந்து தலைப்கை கழுதைன்னு இருதாலும் படம் ஓடும். இதை புரிஞ்சுக்கிட்டு தலைப்புக்கு சண்டை போடாம இருந்தா சினிமாவுக்கு நல்லது" என்கிறார். அனுபவம் வாய்ந்த தயாரிப்பாளர் ஒருவர்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...