3,000 ஸ்கிரீன்களில் விஸ்வரூபம் ரிலீஸ்

கமல்ஹாசனின் அடுத்த படமான, "விஸ்வரூபம் வெளியாகும் தேதியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர், அவரது ரசிகர்கள். 

கமல்ஹாசனோ, இந்த விஷயத்தில் அவசரம் காட்டவில்லை. இந்தியிலும், தமிழிலும், ஒரே நேரத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதால், மிகவும் பொறுமையாக இருக்கிறார்.  

அதற்கான வேலையிலும் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு இருப்பதால், அதை பயன்படுத்திக் கொள்ளும் வகையில்,  இந்தியில் மட்டும், 3,000 ஸ்கிரீன்களில், படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளாராம். 

மாநில எல்லைகளை கடந்த கதைக் களம் என்பதால், இந்தியா முழுவதும், தன் படத்துக்கு வரவேற்பு கிடைக்கும் என, நம்பிக்கையுடன் காணப்படுகிறார், கமல்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...