தர்ம அடிவாங்கிய இயக்குனர்



குடும்ப சென்டிமென்ட் வைத்து படம் இயக்கும் மதுரமான இயக்குனர் அவர். தற்போது மதுரை டூ தேனி செல்லும் பஸ்சில் நடக்கும் சுவையான சம்பவங்களை வைத்து ஆண்களும், பெண்களும் என்ற பொருள்படும்படியான ஒரு படத்தை இயக்கி வருகிறார். 

சில நாட்களுக்கு முன்பு தேனி பக்கம் இதன் படப்பிடிப்பு நடந்தது. வழக்கமாக மதுரை பக்கம் படம் எடுத்தால் மதுரையில் உள்ள துணை நடிகர்களை கொஞ்சம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது எழுதப்படாத விதி. 

இதை மீறி இயக்குனர் இங்கிருந்தே ஆட்களை திரட்டிக் கொண்டு போயிருக்கிறார். 

இதைக் கேள்விப்பட்ட உள்ளூர் நடிகர்கள் படப்பிடிப்பு தளத்திற்கே சென்று நியாயம் கேட்டுள்ளனர். 

ராத்திரி வாங்க பேசிக்கலாம் என்று சொல்லியிருக்கிறார் இயக்குனர். சென்றவர்களும் படப்பிடிப்பு தடைபட வேண்டாம் என்று திரும்பி விட்டார்கள். 

இரவு இயக்குரும் நடிகர் நடிகைளும் தங்கியிருந்த விடுதிக்கு சென்று கேட்டிருக்கிறார்கள். 

அப்போது புல் மப்பில் இருந்த இயக்குனர் வந்தவர்களை ஆபாச வார்த்தைகளால் கர்ஜிக்க, நானும் மதுரைக்காரன்தான்னு சவுண்ட் விட வந்தவர்கள் இயக்குனருக்கு தர்மஅடி கொடுத்தனர். 

தடுக்க வந்தவர்களுக்கும் சரமாரியா அடி விழுந்தது. முகமெல்லாம் வீங்கிய இயக்குனர் லோக்கல் போலீசில் புகார் கொடுத்தாராம். 

குடித்துவிட்டு ஆபாசமாக திட்டி தாக்கியதாக எதிர்தரப்பும் புகார் கொடுத்திருக்கிறதாம்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...