நம்ப வைத்து கழுத்தை அறுத்து விட்டார் வெங்கட்பிரபு


தமிழில் மயக்கம் என்ன, ஒஸ்தி படங்களில் நடித்தவர் ரிச்சா. அந்த இரண்டு படங்களிலுமே நல்ல பர்பாமென்ஸ் செய்திருந்தார். என்றபோதும் இரண்டு படங்களுமே வெற்றி பெறாததால் அதன்பிறகு அவரை புக் பண்ண படாதிபதிகள் தயங்கினர். 

அதனால் மீண்டும் தெலுங்கு சினிமாவில் பிரவேசித்தார் ரிச்சா. அங்கு அவரது நடிப்புத் திறமைக்கு வாய்ப்பு கிடைக்காதபோதும், அவரது கவர்ச்சியை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டதோடு, தாராளமாக சம்பளமும் கொடுத்து ரிச்சாவை ஆதரித்து வருகின்றனர்.

இருப்பினும் தமிழில் நடித்தால் தனது ரேஞ்ச் இன்னும் எகிறும் என்று நினைத்த ரிச்சா மீண்டும் மீண்டும் தமிழ்ப்படங்களுக்கு கல்லெறிந்து வந்தார். அப்படி அவர் குறி வைத்த படம்தான். கார்த்தி நடிக்கும் பிரியாணி. 

ஆனால் இந்தபடத்துக்கு முதலில் ரிச்சாவுக்கு சான்ஸ் தருவதாக சொல்லியிருந்த அப்பட இயக்குனரான வெங்கட்பிரபு, பின்னர் ஹன்சிகாவின் கால்சீட் கிடைத்ததால், கடைசி நேரத்தில் ரிச்சாவை கழட்டி விட்டு விட்டார். 

இதனால் கொதித்தப்போனார் அவர். பிரியாணி படத்தில்நடிக்க வேண்டும் என்பதற்காக ஒரு தெலுங்கு படத்தைகூட தவிர்த்தேன். ஆனால் இயக்குனர் வெங்கட்பிரபு என்னை நம்ப வைத்து கழுத்தை அறுத்து விட்டார். 

அவர் நடிகைகள் கிள்ளுக்கீரையாக நினைக்கிறார். அவருக்கு காலம் சரியான பாடம் புகட்டும் என்று தனது ஆதங்கத்தை கோலிவுட் நண்பர்களிடம் கொட்டித்தீர்த்து வருகிறார் ரிச்சா.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...