கோச்சடையானிலிருந்து கே.எஸ்.ரவிக்குமார் திடீர் விலகல்


ரஜினியின் கோச்சடையான் படத்தின் மேற்பார்வை பொறுப்பை ஏற்று இருந்த டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் திடீரென மாற்றப்பட்டு அவருக்கு பதில் டைரக்டர் மாதேஷ் அந்த பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டுள்ளார். 

ரஜினி நடிப்பில், அவரது இரண்டாவது மகள் சவுந்தர்யா இயக்கத்தில் உருவாகி வரும் படம் கோச்சடையான். இதில் ரஜினி ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடித்து வருகிறார். 

இவர்களுடன் சரத்குமார், ஷோபனா, ருக்மணி, நாசர், ஜாக்கி ஷெரப் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். 

வரலாற்று கதையை மையமாக கொண்டு உருவாகி வரும் இப்படம் முழுக்க முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வருகிறது. 

இப்படத்தின் மேற்பார்வை பொறுப்பை டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் கவனித்து வந்தார். இந்நிலையில் படத்தில் ஷூட்டிங் எல்லாம் முடிந்து கிராபிக்ஸ், சவுண்ட் உள்ளிட்ட பணிகள் நடந்து வரும்நிலையில், ரவிக்குமார் திடீரென மேற்பார்வை பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். 

அவருக்கு பதில் விஜய்யின் மதுர, பிரசாந்த்தின் சாக்லேட், கடைசியாக வினய்யின் மிரட்டல் போன்ற படங்களை இயக்கிய மாதேஷ் அந்த பொறுப்பை ஏற்று இருக்கிறார். 

கோச்சடையான் மேற்பார்வை பொறுப்பிலிருந்து கே.எஸ்.ரவிக்குமார் திடீரென விலகி இருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

அதேசமயம் ரவிக்குமார் இந்தியில் சாமி பட ரீ-மேக் வேலையை துவங்கி இருப்பதால் இப்படத்திலிருந்து விலகி இருப்பதாக கூறப்படுகிறது.  

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...