மனைவியை கொடுமைப்படுத்தும் பிரகாஷ்ராஜ்


சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி ஹிட்டடித்த படம் "கலெக்டர்காரு பாரியா". பிரகாஷ்ராஜ், பூமிகாக நடித்துள்ளனர். 

மனைவியை கொடுமைப் படுத்தும் கொடுமையான கணவன் பிரகாஷ்ராஜ், அவர் மனைவி பூமிகா. 

ஒரு கட்டத்தில் கொடுமை தாங்காமல் அவர் பொங்கி எழும்போது என்ன நடக்கிறது என்பதுதான் கதை. 

கிருபாகர் ரெட்டி இயக்கி உள்ளார். டி.என்.பி.கதிரவன் தமிழ் வசனங்களை எழுதியுள்ளார். ஸ்ரீரமணா பிலிம்ஸ் வெளியிடுகிறது. 

படத்துக்கு பெண் அடிமை இல்லை என்று பெயர் வைத்திருக்கிறார்கள். "உயர்தர குடும்பத்து பெண்கள் பார்ப்பதற்கு பளபளப்பாக இருக்கிறார்கள். 

காரில் வருகிறார்கள், போகிறார்கள் அவர்கள் எல்லாம் சந்தோஷமாக இருப்பதாக நினைக்கிறோம். 

உண்மையில் அவர்கள் சந்தோஷமாக இருப்பதாக நடிக்கிறார்கள். அந்த உண்மையை சொல்லும் படம். 

இது ஆந்திராவுக்கு மட்டுமல்ல எல்லா மொழிக்கும் பொருந்துகிற படம்" என்கிறார் இயக்குனர் கிருபாகர் ரெட்டி.

டி.வி பெட்டியில இந்த கதைதானே ஒடுது பாஸ்...!!

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...