நடிகர்களுக்கு எதிராக நடிகர் சங்க செயலாளர்


நடிகர்களுக்கு எதிராக நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாவி பேசி வரும் பேச்சுக்கள் முன்னணி நடிகர்கள் இடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. 

நடிகர் ராதாரவி நடிகர் சங்க பொதுச் செயலாளராக இருந்தாலும் அவருக்கு சினிமா வாய்ப்புகள் எதுவும் இல்லை. ஆனால் நடிகர், நடிகைகளின் சம்பள பிரச்னைகளில் பஞ்சாயத்து பேசி வாங்கிக் கொடுத்து இருதரப்பினரிடமும் கமிஷன் பெற்றுக் கொள்வார் என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில் நடிகர்களுக்கு எதிரான அவர் தொடர்ந்து பேசி வருவது குறித்து வருகிற சங்க கூட்டத்தில் பிரச்னையை கொண்டு வர பெரிய நடிகர்கள் முடிவு செய்திருக்கிறார்கள்.

சமீபத்தில் சத்திரம் பேருந்து நிலையம் என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் அவர் பேசியது நடிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் பேசியது இதுதான் "அந்தக் காலத்தில் தயாரிப்பாளர்களின் காலில் விழுந்து வணங்கினார்கள் நடிகர்கள். 

காரணம் தயாரிப்பாளர்கள்தான் முதலாளிகள். ஆனால் இன்றைக்கு காலை வாருபவர்களாக இருக்கிறார்கள். இன்றைக்கு புரட்யூசரை யாருக்கும் தெரியவில்லை. பெரிய படம் எடுத்த புரட்யூசர்களைகூட இவர் இன்ன படம் எடுத்தார் என்றுதான் அறிமுகப்படுத்த வேண்டியிருக்கிறது. 

ஒரு படம் வெற்றி பெற்றால் அதன் இயக்குனரும், நடிகரும் உட்கார்ந்து வெற்றியை கொண்டாடுகிறார்கள். தைரியமாக பணம்போட்டு படம் எடுத்த தயாரிப்பாளரை யாரும் கண்டுகொள்வதில்லை. 

தயாரிப்பாளர்களும் நடிகர்களின் பின்னால் ஓடுகிறார்கள். நடிகர்களுக்கு படத்துக்கு படம் சம்பளம் உயர்த்திக் கொடுத்து அவர்களை பெரிய ஆளாக ஆக்குபவர்கள் தயாரிப்பாளர்கள். ஒரு படம் ஓடாவிட்டாலும் அதில் நடித்த நடிகர் அடுத்த படத்துக்கு சம்பளத்தை உயர்த்தி விடுகிறார். 

வில்லனாக நடிக்கும் ஒரு சாதாரண நடிகர் 25 லட்சம் சம்பளம் கேட்கிறார்" என்று பேசினார். ராதாரவியின் இந்த பேச்சு நடிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்குத்துங்றது இதுதானோ...

1 comments:

Unknown said...

மிக அருமையான பதிவு
வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
உங்கள் வரவை விரும்புகிறது.
வாரம் இரு நட்சத்திர பதிவர்
தினபதிவு திரட்டி

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...