
என்னோட வளர்ச்சி பாதையில் ரஜினி, கமல் இரண்டு பேருமே ரொம்ப அக்கறையா இருக்காங்க என்று நடிகர் விஜய் கூறியுள்ளார்.
தொடர்ந்து அதிரடி பஞ்ச் டயலாக்குகளும், அதிரடி ஆக்ஷ்ன்களும் உள்ள கமர்ஷியல் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த விஜய், சமீபகாலமாக தனது ரூட்டை மாற்றியுள்ளார்.
காவலன், நண்பன் என்று வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கும் துப்பாக்கி படத்தினை மிக ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார் விஜய்.
இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது, ரஜினி சார் திடீர் திடீர்னு போன் பண்ணுவார். உங்க ஸ்டில்லை பார்த்தேன், சூப்பரா இருக்கு.
உங்களோட அடுத்தப்படம் என்ன என்று ரொம்ப ஆர்வமா விசாரிப்பார். அதேப்போல் கமல் சாரை பார்க்க அவரோட அலுவலகத்துக்கு ஒருமுறை போய் இருந்தேன்.
அப்போ நிறைய அட்வைஸ் கொடுத்தார். ஐந்து படங்களுக்கு ஒரு படமாவது நீங்க வித்தியாசமா, மாற்றமா ஒரு படம் கொடுங்க என்று சொன்னார். அவர் சொன்னதை இப்போ தான் என்னால் செய்ய முடிந்தது.
காவலன், நண்பன், துப்பாக்கி போன்ற படங்களில் நடிப்பதற்கு கமல் சாரோட அட்வைஸ் தான் காரணம். என்னோட வளர்ச்சி பாதையில் ரஜினி, கமல் இரண்டு பேரும் அக்கறையாக இருக்காங்க என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment