துப்பாக்கி பட சர்ச்சை விவகாரம்


ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள முதல் படம் துப்பாக்கி. இந்த படத்துக்கு ஆரம்பத்திலிருந்தே ஏதாவது ஒரு ரூபத்தில் பிரச்னைகள் பூதாகரமாக வெடிப்பது வாடிக்கையாகி விட்டது. 

அந்த வகையில் தற்போது திரைக்கு வந்துள்ள அப்படத்தில் முஸ்லீம்களை தீவிரவாதிகளாக சித்தரித்திருப்பதாக ஒருசாரர் போர்க்கொடி பிடித்துள்ளனர். 

மேலும், இரு தினங்களுக்கு முன் முஸ்லீம் கட்சியைச்சேர்ந்த 60 பேர் விஜய் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றபோது அவர்கள் போலீசார் கைது செய்தனர். 

இதையடுத்து விஜய் வீடு மற்றும் சென்னையில் துப்பாக்கி படம் திரையிடப்பட்டுள்ள பல முக்கிய தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சென்னையில் பத்திரிகையாளர்களை துப்பாக்கி படக்குழுவினர் சந்திப்பதாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. 

ஆனால் கடைசி நேரத்தில் பிரஸ் மீட் கேன்சல் செய்யப்பட்டது. காரணம், யாராவது நிருபர்கள் சர்ச்சைக்குரிய கேள்விகளைக்கேட்டு, அவர்களுக்கு ஏதாவது பதில் கொடுக்க, அதையே அவர்கள் வேறு மாதிரியாக திரித்து எழுதி விட்டால், அடுத்து வேறு ரூபத்தில் பிரச்னைகள் வெடிக்கும் என்பதால், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மீடியாக்களை சந்திப்பதை தவிர்த்துக் கொண்டுள்ளார்கள்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...