டைரக்டர்களை டீலில் விட்ட தனுஷ்


கோடம்பாக்கத்திலுள்ள விஜய், அஜீத், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களே இன்னும் தமிழ்நாட்டு எல்லையை கடந்து வடக்கே செல்ல நினைக்கவில்லை. 

ஆனால் 3 படத்தில் இடம்பெற்ற ஒய்திஸ் கொலவெறி என்ற ஒரே பாடல் மூலம் தனுஷ் தற்போது பாலிவுட்டில் கோலேச்சிக்கொண்டிருக்கிறார். 

அவர் நடித்து வரும் ராஞ்சா என்ற மெகா பட்ஜெட்டில் தயாராகிறதாம். இதையடுத்து புதிய படங்களில் நடிக்கவும் கதை கேட்டு வருகிறாராம்.

இதன்காரணமாக, தமிழ் சினிமாவில் தன்னை நம்பி படம் இயக்கும் சில இயக்குனர்களே மறந்தே விட்டாராம் தனுஷ். 

இதில் களவாணி, வாகைசூடவா படஙகளை இயக்கிய சற்குணம் அடுத்து தனுசை வைத்து சொட்ட வாளக்குட்டி என்ற படத்தை இயக்குவதற்காக மாதக்கணக்கில் காத்துக்கொண்டிருக்கிறார். 

அதேபோல், மரியான் படத்தை இயக்கும் பரத்பாலாவோ பாதி படப்பிடிப்பை முடித்து விட்டு மீதியை எப்போது முடிப்பது என்று தெரியாமல் புலம்பிக்கொண்டு நிற்கிறார். 

எப்போது படப்பிடிப்பை வைத்துக்கொள்ளலாம் என்று தனுஷை கேட்டால், இதோ சொல்றேன், அதோ சொல்றேன் என்று எந்த தீர்க்கமான முடிவையும் சொல்ல மாட்டேன் என்கிறாராம். 

இதனால் மேற்படி இரண்டு இயக்குனர்களும் ஆளுக்கொரு பக்கமாக புலம்பிக்கொண்டு திரிகின்றனர்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...