என்னை விட என் தம்பி பெரிய நடிகன் - ஆர்யா


முன்பெல்லாம் சினிமாவுக்கு நடிக்கத் தெரிந்தவர்கள், ஆர்வமுள்ளவர்கள் மட்டுமே வருவார்கள். ஆனால் இப்போது சினிமா குடும்ப தொழில் என்ற ரீதியில் சென்று கொண்டிருக்கிறது. 

அப்பா இருந்தால் மகனும் வருகிறார், அண்ணன் இருந்தால் தம்பியும் சினிமாவுக்கு வருகிறார். இல்லையேல் வரவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்படுகிறார்கள். 

இந்த நிலையில், சூர்யாவைத் தொடர்ந்து அவரது தம்பி கார்த்தி வந்தது போல் இப்போது ஆர்யாவைத் தொடர்ந்து அவரது தம்பி சத்யாவும் நடிகராகியிருக்கிறார்.

இந்த சத்யாவை ஏற்கனவே தனது சொந்த தயாரிப்பான படித்துறை என்ற படத்திலேயே நடிகராக்கினார் ஆர்யா. ஆனால் அந்த படம் இன்னமும் வெளியாகவிலலை. 

இந்நிலையில், சின்னத்திரை நடிகர் விஜய் ஆதிராஜ் தான் இயக்கும் முதல் படமான புத்தகத்தில் சத்யா நாயகனாக்கியுள்ளார். என் தம்பி சத்யாவுக்கு பெரிதாக நான் நடிப்பு எதுவுமே சொல்லிக்கொடுத்ததில்லை. 

நடிக்க விரும்பினான். நான் ஓகே சொல்லி விட்டேன். ஆனால் முதல் படத்திலேயே அவனது நடிப்பு பிரமாதமாக இருக்கிறது. அந்த வகையில் என்னைவிட என் தம்பி பெரிய நடிகனாக வருவான் என்கிறார் ஆர்யா.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...