ஜெயம் ரவியுடன் ரொமான்ஸ்க்கு தயாராகும் நயன்தாரா

ஆதிபகவன் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி அடுத்து நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பார் எனத் தெரிகிறது. நீண்ட காலமாக ஜெயம் ரவி நடித்து வரும் படம் ஆதி பகவன். இப்படத்தை அமீர் இயக்குகிறார்.

கிட்டத்தட்ட இரண்டு வருடமாக நடந்து வரும் இப்படத்தின் சூட்டிங் இன்னும் முடிந்தபாடில்லை. இந்நிலையில் இப்படத்திற்கு அடுத்து பூலோகம் என்ற படத்தில் நடிக்கிறார் ரவி.

எஸ்.பி.ஜெகநாதனிடம் உதவியாளராக இருந்த கல்யாண் இப்படத்தை தயாரிக்கிறார். ஆஸ்கர் ரவிச்சந்திரன் இப்படத்தை தயாரிக்கிறார்.

பூலோகத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

சமீபத்தில் கல்யாணும், அவர் குழுவை சேர்ந்தவர்களும் நயன்தாராவை சந்தித்து பூலோகம் படத்‌தின் கதையை விளக்கி உள்ளனர்.

நயன்தாராவுக்கும் பூலோகம் படத்தின் கதை பிடித்து போய்விட்டதாக தெரிகிறது. இருந்தும் நடிப்பதாக நயன்தாரா உறுதியாக சொல்லவில்லை.

அதேசமயம் சினிமாவில் ரீ-என்ட்ரியாகி இருப்பதால் தமிழ் சினிமாவில் தன்னை நிலைத்து கொள்ள இப்படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

மேலும் ஜெயம் ரவியுடன் சேர்ந்து நயன்தாரா இதுவரை எந்த படமும் நடித்ததில்லை. அதனால் நிச்சயம் இப்படத்தில் நடிப்பார் என்று நம்பப்படுகிறது.

அடுத்த மாதம் இப்படத்தின் சூட்டிங்கை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளனர்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...