ஜன்னலோர நடிகரை ஓரங்கட்டிய படக்குழு



சினி விழாக்களில் பிரபலங்களை வரவழைத்து படம் குறித்து மேடையில் பேசவைப்பது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. 

அவ்வாறு மேடைக்கு அழைக்கும் போது சிலருக்கு உட்கார இடம் இல்லாமல் ஒரு ஓரத்தில் உட்கார வைக்கும் அவலமும் நடந்து வருகிறது. 

இதேபோல்தான் அந்த மூன்றெழுத்து களவாணி நடிகர் சமீபத்தில் ஒரு சினி விழாவில் கலந்து கொண்டார். 

அவரை மேடைக்கு வரவழைத்த படக்குழுவினர் மேடையில் உட்கார இடம் இல்லாததால் ஒரு ஓரத்தில் இருந்த இருக்கையில் அமர வைத்துள்ளனர். 

அவரும் வேறு வழியின்றி அங்கு போய் உட்கார்ந்துள்ளார். சில நேரம் கழித்து அவரை விழாக்குழுவினர் பேச அழைத்தனர். 

ஆனால், அங்கு அவர் அமர்ந்திருந்த இருக்கைதான் இருந்ததே தவிர, அவரைக் காணவில்லை. 

தன்னை மேடையின் ஓரத்தில் உட்கார வைத்ததாலேயே அங்கிருந்து நடிகர் கிளம்பிப் போய்விட்டதாக கூறப்படுகிறது. 

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...