வெங்கட்பிரபுவுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை

கோவா படத்தை வெங்கட்பிரபு இயக்கி வந்த நேரம் அவரது தோழியானார் சோனா. 

அந்த நட்பு அடிப்படையில் தனது பேனருககு ஒரு படம் இயககித்தருமாறு வெங்கட்பிரபுவை கேட்டுக்கொண்ட சோனா, அதற்காக ஒரு கோடி ரூபாய் அவருக்கு அட்வான்சும் கொடுத்தாராம். 

ஆனால், அதன்பிறகு சில பெரிய கம்பெனி படங்களை இயக்கிய வெங்கட்பிரபு, சோனாவை கண்டுகொள்ளவேயில்லை.

இதற்கிடையில், மிட்நைட் பார்ட்டி ஒன்றில் எஸ்.பி.பி.சரணுடன் சோனா லடாயில் ஈடுபட்டதால், அதன்பிறகு வெங்கட்பிரபுவும் மெல்ல மெல்ல சோனாவை விட்டு விலகினார். 

அதையடுத்து அஜீத் நடித்த மங்காத்தா மற்றும் கார்த்தி நடித்த பிரியாணி படத்தை இயக்கிய அவர் அடுத்து, சூர்யாவைக் கொண்டு ஒரு படம் இயக்க தயாராகிக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், வெங்கட்பிரபு அடுத்து அஜீத்தை இயக்குவாரோ அல்லது சூர்யாவை இயக்குவாரோ அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால், அந்த படம் நான் தயாரிக்கிற படமாக இருக்க வேண்டும என்று திடீர் போர்க்கொடி பிடித்துள்ளாராம். 

ஆனால் சூர்யாவை இயக்கும் படத்தை ஒரு பிரபல நிறுவனம் தயாரிப்பதற்காக பேசியுள்ள வெங்கட்பிரபு, சோனா போடும் இந்த முட்டுக்கட்டை காரணமாக தடுமாறிப்போய் நிற்கிறாராம்.

இதைப்பார்த்த சில அவரது அபிமானிகள், எதற்காக தடுமாற வேண்டும், நீங்கள் அடுத்து இயக்கும் படத்தில் ஒரு வில்லி வேடம் தருவதாக சோனாவுக்கு சொல்லி அவரை ஆப் பண்ணி விடுங்கள் என்று ஐடியா கொடுத்து வருகிறார்களாம். 

ஆனால், சோனாவின் சகவாசமே வேண்டாமென்று நினைக்கும் வெங்கட்பிரபு, அவரை வேறுவிதமாக ஆப் பண்ண புதிய யோசனையில் ஆழ்ந்திருக்கிறாராம்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...