கெளதம்மேனனை வெறுப்பேற்றிய இயக்குனர்கள்


சினிமாவைப்பொறுத்தவரை இயக்குனர்கள் என்றால் அவர் இயக்கும் படங்கள் ஓடிக்கொண்டிருக்கும் வரை பிரச்சினை இல்லை. 

ஆனால் படங்கள் ஓடவில்லை என்றால் அவர்களைப்போன்ற இயக்குனர்களே அடுத்து ட்ராக் மாற வேண்டியதானே என்று சொல்வார்கள். 

அந்த நிலை தற்போது கெளதம்மேனனுக்கும் ஏற்பட்டுள்ளது. நடுநிசி நாய்களை அடுத்து தற்போது நீதானே என் பொன்வசந்தமும் ரசிகர்களின் ஆதரவினை பெறாததால், அடுத்து அவரை நடிப்பு என்ற ட்ராக்கிற்கு இழுக்கலாமா? என்று யோசித்த டைரக்டர் சமுத்திரகனி தான் இயக்கும் படத்தில் நடிக்க அழைத்தாராம்.

ஆனால், ஏற்கனவே வேட்டையாடு விளையாடு படத்தில் வெள்ளி நிலவே என்ற பாடலில் கமலுடன் நடனமாடியுள்ள கெளதம்மேனனோ, எனக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை என்று மறுத்து விட்டாராம். 

சரி காமெடி ட்ராக்கிலாவது நடியுங்கள் என்று இன்னொரு டைரக்டர் அழைத்தபோது, என் பொழப்பு உங்களுக்கெல்லாம் காமெடியா இருக்குதா? என்று எரிச்சலை காட்டியிருக்கிறார் கெளதம். 

இதையடுத்து, உடனடியாக ஒரு மெகா ஹிட் கொடுத்து காலரை தூக்கி விட்டால்தான் தனக்கு மரியாதை என்று திரைக்குப்பின்னால் தீவிரம் காட்ட தொடங்கியிருக்கிறார் மனிதர்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...