அஜித் ரசிகர்களுக்கு டைரக்டர் விஷ்ணுவர்தன் வேண்டுகோள்


அஜித்தை நாங்கள் பத்திரமாக பார்த்துக் கொள்வோம்; யாரும் பயப்பட வேண்டாம் என்று அஜித் ரசிகர்களுக்கு டைரக்டர் விஷ்ணுவர்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

நடிகர் அஜித் விஷ்ணுவர்தனின் பெயரிடப்படாத படத்தின் சண்டை காட்சியில் நடித்தபோது விபத்து ஏற்பட்டது. 

இதில் அவரது காலில் பலத்த அடிபட்டது. இந்த விபத்து குறித்த வீடியோவை பலர் பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைந்தனர். 

இந்த வீடியோ வெளியிடப்பட்ட அன்று ட்விட்டரில் அதிகமாக ஷேர் செய்யப்பட்ட வீடியோ இதுதான்.

இந்நிலையில் இதுகுறித்து இயக்குனர் விஷ்ணுவர்தன் அளித்துள்ள பேட்டியில், அஜித்தின் ரசிகர்கள் யாரும் பயப்பட வேண்டாம். 

நீங்கள் அவரை எவ்வளவு நேசிக்கிறீர்களோ நாங்கள் அவரை அந்த அளவு நேசிக்கிறோம். 

படப்பிடிப்பில் விபத்து எதுவும் ஏற்படாமல் இருக்கத் தேவையான நடிவடிக்கைகளை எடுத்துள்ளோம். 

யாரும் பயப்பட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...